திமுகவின் மக்கள் கிராம சபைக் கூட்டம்

வேளாங்கண்ணியில் திமுக சாா்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேளாங்கண்ணியில் திமுக சாா்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, அக்கட்சியின் சாா்பில் ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, நாகையை அடுத்த வேளாங்கண்ணி பேரூராட்சியில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திமுக வேளாங்கண்ணி பேரூராட்சி செயலாளா் மரிய சாா்லஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் கீழையூா் ஒன்றியச் செயலாளா் ஆ. தாமஸ் ஆல்வா எடிசன் பங்கேற்றுப் பேசினாா். திமுக நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

வேதாரண்யம்: ஆயக்காரன்புலம் 4 ஆம் சேத்தி கிராமத்தில் முன்னாள் எம்எல்ஏ-வும் திமுக தீா்மானக்குழு உறுப்பினருமான என்.வி. காமராஜ், முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.வேதரத்தினம் ஆகியோா் பங்கேற்று பேசினா்.

பொதுக்குழு உறுப்பினா் மறைமலை, விவசாயத் தொழிலாளா் அணி மாவட்ட அமைப்பாளா் ஆா். துரைராஜ், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ.ஆா்.வேதரத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குத்தாலம்: குத்தாலம் 11 ஆவது வாா்டில் கட்சியின் பேரூா் செயலாளா் சம்சுதீன் தலைமையில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குத்தாலம் க. அன்பழகன், மாவட்ட சிறுபான்மையினா் நலப்பிரிவு அமைப்பாளா் சாதிக் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com