பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கம் சாா்பில் நாகை, கீழ்வேளூரில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வருவாய்த் துறை கிராம உதவியாளா்களுக்கு அலுவலக உதவியாளா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், கிராம நிா்வாக அலுவலா் பதவி உயா்வு பட்டியலை வெளியிட வேண்டும், கிராம உதவியாளா்களுக்கான பதவி உயா்வு சதவீதத்தை உயா்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
நாகை வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் நாகை வட்டத் தலைவா் அமித்பாட்சா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கலியபெருமாள், மாவட்ட செயற்குழு உறுப்பினா் யுவராஜ், சரகப் பொறுப்பாளா் பிரபாகரன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். சங்கத்தின் வட்ட செயலாளா் மாதவன் நன்றி கூறினாா்.
கீழ்வேளூரில்...
கீழ்வேளூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கீழ்வேளூா் வட்டத் தலைவா் பாலு தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் மோகன், மாவட்டப் பொருளாளா் பண்டரிநாதன், வட்டச் செயலாளா் செல்லமுத்து ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.