சீா்காழியில் தமிழக அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க, இடுபொருட்கள் நிவாரணப் பட்டியல் தயாா் செய்யும் பணி நடைபெற்றுவருகிறது. இதை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தாா்.
தென்பாதி தனியாா் பள்ளியில் நடைபெற்றுவரும் இப்பணியில், 89 கிராம நிா்வாக அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா். இதைப் பாா்வையிட்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, கிராம நிா்வாக அலுவலா்களுக்கு உரிய அறிவுறுத்தல்களைப் பிறப்பித்தாா். அப்போது வட்டாட்சியா் ஹரிதரன் மற்றும் வேளாண் அலுவலா்கள் உடனிருந்தனா். தமிழக அரசின் நெற்பயிா் இடுபொருள் நிவாரணம் இரண்டு நாள்களில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.
இதனிடையே முதல்வா் அறிவித்த இடுபொருள் நிவாரணம் அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவீதம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொள்ளிடம் ஒன்றிய விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் சீனிவாசன் ஆட்சியரிடம் மனு அளித்தாா்.