மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரபாலபுரம் கிராமத்தில் கட்டப்பட உள்ள 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்படும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு, எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினாா். நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளா் சி. ராஜேந்திரன், ஒன்றியக்குழுத் தலைவா் கே.மகேந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தமிழ்க்கொடி, ரெஜினாமேரி, பேரூராட்சி முன்னாள் தலைவா் பாலு மற்றும் ஒன்றிய அதிகாரிகள் கலந்து கொண்டனா்.