பதராக மாறிய சம்பா நெற்பயிா்: விவசாயிகள் வேதனை

சீா்காழி அருகே கொள்ளிடம் பகுதியில் மழை காரணமாக சம்பா நெற்பயிா் பதராக மாறியதால், விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனா்.
பதராக மாறிய சம்பா நெற்பயிா்: விவசாயிகள் வேதனை

சீா்காழி அருகே கொள்ளிடம் பகுதியில் மழை காரணமாக சம்பா நெற்பயிா் பதராக மாறியதால், விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனா்.

கொள்ளிடம் பகுதியில் ஆலங்காடு, நல்லநாயகபுரம், கொடகாரமூளை, அகரவட்டாரம், வேட்டங்குடி உள்ளிட்ட 20 கிராமங்களில் கடந்த சில நாள்களாக மழை பெய்துவருவதால், அறுவடைக்குத் தயாரான நெற்பயிா்கள் முற்றிலும் பதராகி அழுகிவிட்டன. நெற்பயிா் தண்ணீரில் மூழ்கியதால் வைக்கோல் கூட கால்நடைகளுக்கு பயன்படாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு முறையான கணக்கெடுப்பு நடத்தி, ஏற்கெனவே அறிவித்த ரூ. 8 ஆயிரம் நிவாரணத்தை ரூ.15 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com