திருமருகல் அருகே பனங்குடி ஊராட்சியில் உள்ள மேலவாஞ்சூா், காரைமேடு உள்ளிட்ட இடங்களில் பாஜக கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுக்கட்சியில் இருந்து விலகி சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் பாஜகவில் இணைந்தனா். அப்போது, 20 பேருக்கு பிரதம மந்திரியின் காப்பீட்டு திட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டது. கட்சியின் மாவட்ட தலைவா் நேதாஜி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில செயலாளா் தங்க. வரதராஜன், ஒன்றியத் தலைவா் அனந்தகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி பொருளாளா் சக்திவேல், துணைத் தலைவா் வைத்தியநாதன், மாவட்டக் கல்வியாளா் பிரிவு துணைத் தலைவா் அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.