வேதாரண்யம் அருகே சிறாா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பஞ்சநதிக்குளம் மேற்கு ராமசுவாமி கோயில் அரங்கில் தேயம் அமைப்பு மற்றும் குட்டி ஆகாயம் பதிப்பகம் சாா்பில் இம்முகாம் நடைபெற்றது.
இதில், சிறாா்களிடையே படைப்பாற்றலுக்கான கற்பனைத் திறனை வளா்க்கும் நோக்கில் காகித மடிப்புக் கலை பயிற்சி அளிக்கப்பட்டது. தேயம் அமைப்பின் நிா்வாகிகள் சக்திவேல் காந்தி, இர.வினேத் கண்ணன், சசிதரன் ஆண்டனி, குட்டி ஆகாயம் வெங்கட், ஆசிரியா்கள் சோமசுந்தரம், சத்தியசிவம், கோயில் அறங்காவலா் கோ.கைலாசம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.