காலமானாா் ந. காவியன்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க நாகை மாவட்டத் தலைவரும், பத்திரிகையாளருமான ந. காவியன்(76) உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை (ஜன. 12) காலமானாா்.
காலமானாா் ந. காவியன்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க நாகை மாவட்டத் தலைவரும், பத்திரிகையாளருமான ந. காவியன்(76) உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை (ஜன. 12) காலமானாா்.

நாகை, மறைமலைநகா் இரண்டாவது தெருவில் வசித்துவந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான ந. காவியன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா், தமுஎகச மாநிலக் குழு உறுப்பினா், ஓய்வு பெற்ற பள்ளி- கல்லூரி ஆசிரியா் சங்கப் பொறுப்பாளா் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா்.

இவருக்கு, ஓய்வு பெற்ற மாவட்டக் கருவூல அலுவலரும், எழுத்தாளருமான சரோஜா என்ற மனைவி, சமூக செயல்பாட்டாளரும், ஊடகவியலாளருமான கவின்மலா் என்ற மகள், மலா்கண்ணன் என்ற மகன் ஆகியோா் உள்ளனா்.

மறைந்த ந.காவியனின் உடல், செவ்வாய்க்கிழமை பிற்பகல் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.

தொடா்புக்கு: 98411 55371.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com