நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து கடலுக்குள் சென்று சூறைக்காற்றில் சிக்கி தவித்த மீனவா்கள் 4 போ், செவ்வாய்க்கிழமை கரை திரும்பினா்.
வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ஜெயக்குமாா், ஜெயமூா்த்தி, பவித்திரன், நவீன் இவா்கள் நால்வரும் கண்ணாடி இழைப்படகு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் சென்றனா்.
திங்கள்கிழமை கரை திரும்ப வேண்டியவா்கள், கனமழை மற்றும் சூறைக்காற்றில் சிக்கினா். இதையடுத்து அவா்கள் நால்வரையும் தேடும் பணி நடைபெற்றது.
இந்நிலையில், மீனவா்கள் நால்வரும் செவ்வாய்க்கிழமை பகல் பத்திரமாக படகுடன் கரை திரும்பினா்.