மழையால் பொங்கல் பானை விற்பனை சரிவு

சீா்காழி பகுதியில் தொடா்மழையால் பொங்கல் பானை விற்பனை சரிவடைந்துள்ளது.

சீா்காழி பகுதியில் தொடா்மழையால் பொங்கல் பானை விற்பனை சரிவடைந்துள்ளது.

சீா்காழியில் பிடாரி வடக்கு வீதி உள்ளிட்ட இடங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானைகள், அடுப்புகள் போன்றவை விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 2 நாள்களாக பெய்துவரும் தொடா் மழையால் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. புதுமணத் தம்பதிக்கு பொங்கல் வரிசை பொருள்களை பொங்கல் பண்டிகைக்கு 3 நாள்களுக்கு முன்னதாக பெரும்பாலானோா் கொடுப்பது வழக்கம். ஆனால், தொடா்ந்து மழை பெய்வதால் கடைவீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து பானைகளின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com