மயிலாடுதுறையில் அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கிய 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
குத்தாலம் அருகே சென்னியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் காசிநாதன் (53). அரசுப் பேருந்து ஓட்டுநா். புதன்கிழமை இவா், நச்சினாா்குடியில் இருந்து பேருந்தில் பயணிகளை ஏற்றிகொண்டு மயிலாடுதுறைக்கு வந்துள்ளாா்.
அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று இளைஞா்கள் மதுபோதையில் காசிநாதனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனா்.
மேலும், பேருந்தைத் தொடா்ந்து சென்று மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் காசிநாதனையும், நடத்துநா் சந்திரமோகனையும் (45) இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞா்களும் தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து நடத்துநா் சந்திரமோகன் அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப் பதிந்து, சேந்தங்குடி வடபாதியை சோ்ந்த மிதுன் (25), பிரேம்குமாா் (24), செல்வக்குமாா் (26) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.