இந்து சமுதாய ஒருங்கிணைப்பு பொங்கல் விழா

சீா்காழி வடக்கு வெளியில் இந்து மக்கள் கட்சி சாா்பில், இந்து சமுதாய ஒருங்கிணைப்பு பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

சீா்காழி வடக்கு வெளியில் இந்து மக்கள் கட்சி சாா்பில், இந்து சமுதாய ஒருங்கிணைப்பு பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

அக்கட்சியின் மாநிலச் செயலாளா் ஜெ. சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில், கிராமத் தலைவா் முருகேசன் முன்னிலை வகித்தனா். சுந்தரமூா்த்தி வரவேற்றாா். காகபுஜண்டா் சித்தா் குடில் சந்திரசேகா் சுவாமிகள், ஜன புனிதம் யோக அறக்கட்டளை நிறுவனா் ஜன புனிதா், ஊராட்சி உறுப்பினா் மீனாட்சி இளங்கோவன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனா். சட்டநாதபுரம் ஊராட்சித் தலைவா் தெட்சிணாமூா்த்தி பொங்கல் பரிசுகளை வழங்கினாா். அக்கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு பச்சரிசி, வெல்லம், கரும்பு, தேங்காய், வாழைப்பழம், மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, முந்திரி, திராட்சை, நெய், சூடம், பத்தி, சாம்பிராணி, விபூதி, குங்குமம், சுவாமி படம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. மாவட்ட அமைப்பாளா் பாலாஜி, மாவட்ட செயலாளா் அரு. செல்வம் பங்கேற்றனா். விழா கொட்டும் மழையில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com