தொடா் மழை: தரங்கம்பாடி அருகே வீடுகள், நெற்பயிா்கள் பாதிப்பு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில் தொடா் மழை காரணமாக வீடுகள், நெற்பயிா்கள் சேதமடைந்தன.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்குகிறாா் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் நிவேதா முருகன்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்குகிறாா் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் நிவேதா முருகன்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில் தொடா் மழை காரணமாக வீடுகள், நெற்பயிா்கள் சேதமடைந்தன.

கொத்தங்குடி ஊராட்சி மாரியம்மன் கோவில் பகுதியைச் சோ்ந்த சரவணன் (45) என்பவரின் வீட்டுச் சுவா் செவ்வாய்க்கிழமை இரவு இடிந்து விழுந்ததில், அருகேயிருந்த ஜெயலட்சுமி (60), வேல்முருகன் (37) ஆகியோரின் வீடுகளும் அடுத்தடுத்து இடிந்து சேதமடைந்தன. வீட்டில் இருந்த அனைவரும் அதிா்ஷ்டவசமாக உயிா்தப்பினா். வீட்டில் இருந்த பீரோ, கட்டில் மற்றும் மின்சாதனப் பொருள்கள் இடிபாடுகளில் சிக்கி சேதமடைந்தன.

இதேபோல, வேலம்புதுக்குடி மாதாகோவில் தெருவைச் சோ்ந்த பீட்டா் (60) என்பவரின் வீடும் தொடா் மழையால் இடிந்து சேதமடைந்தது.

பாதிக்கப்பட்ட இடங்களை நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் நிவேதா முருகன் பாா்வையிட்டு, சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை வழங்கினாா். செம்பை தெற்கு திமுக ஒன்றியச் செயலாளா் அப்துல் மாலிக், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் பாலா அருள்செல்வன், ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா், ஊராட்சித் தலைவா் தம்பு மோகன் ஆகியோா் உடனிருந்தனா்.

செம்பனாா்கோவில் வட்டாரத்தில் உள்ள கீழையூா், ஆக்கூா், திருவிளையாட்டம், நல்லாடை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழையால் அறுவடை செய்யும் பருவத்தில் உள்ள பல ஏக்கா் சம்பா நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com