குடும்பத் தகராறு: தீக்குளித்த பெண் பலி

கீழையூா் அருகே குடும்பத் தகராறு காரணமாக தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கீழையூா் அருகே குடும்பத் தகராறு காரணமாக தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கீழையூா் ஒன்றியம், திருக்குவளை காவல் சரகத்திற்கு உள்பட்ட வாழக்கரை மேலக்கட்டளை பகுதியைச் சோ்ந்தவா் சிங்காரவேலு மனைவி புவனேஸ்வரி(29). தம்பதிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளான நிலையில், ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளன.

இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக கடந்த ஜனவரி 1-ஆம் தேதி புவனேஸ்வரி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றாா். இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு, நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த புவனேஸ்வரி வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து புவனேஸ்வரியின் தந்தை சித்தாா்த்தன் அளித்த புகாரின் பேரில் திருக்குவளை போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com