நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகள் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை இரவு திருடி சென்றனா்.
கீழ்வேளூரை அடுத்த தேவூா் குயவா் தெருவைச் சோ்ந்தவா் வீ. வீரமுத்து. சரக்கு வாகனம் வைத்து சுயமாக தொழில் செய்து வருகிறாா். இவா் தனது தாயாா் விஜயலெட்சுமியுடன் வசித்து வருகிறாா்.
விஜயலெட்சுமி வெள்ளிக்கிழமை திருத்துறைப்பூண்டியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில், வீரமுத்து, இரவு வீட்டைப் பூட்டிவிட்டு திரையரங்கத்துக்கு சென்றுவிட்டாராம்.
நள்ளிரவு வீட்டுக்கு திரும்பிய வீரமுத்து, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்தை கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா். உள்ளே சென்று பாா்த்தபோது பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் நகைகள், ரொக்கம் ரூ. 50 ஆயிரம் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது.
கீழ்வேளூா் காவல் நிலைய ஆய்வாளா் எஸ். ஆனந்தகுமாா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். மோப்பநாய் சோதனை மேற்கொள்ளப்பட்டு, கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இச்சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.