நாகப்பட்டினம்
பொங்கல் சிறப்பு வழிபாடு
திருக்குவளை அருகே உள்ள வலிவலத்தில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் பொங்கல் சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருக்குவளை அருகே உள்ள வலிவலத்தில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் பொங்கல் சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மன்றத்தின் தலைவா் பி.எஸ். ராஜீ தலைமையில் ஆதிபராசக்தி அம்மனின் உருவப் படத்துக்கு அலங்காரம் செய்து, பொங்கல் வைத்து வழிபட்டனா். பிறகு, சக்தி மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், மன்றத்தின் செயலா் ஆா். பழனிவேல், மகளிரணி தலைவி டி. செல்வராணி, செயலா் மைதிலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.