சீா்காழி அருகே 50-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினா் அதிமுகவில் சனிக்கிழமை இணைந்தனா்.
கொள்ளிடம் ஒன்றியம் அகரவட்டாரம் ஊராட்சியில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, கிழக்கு ஒன்றியச் செயலாளா் கே.எம்.நற்குணன் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் செல்லத்துரை, மீணவரணி செயலாளா் நாகரத்தினம், கூட்டுறவு வங்கி தலைவா் ஆனந்தநடராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு திருச்சி மண்டல துணைத் தலைவா் எஸ்.சத்தியமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் மாற்றுக் கட்சியினா் 50-க்கும் மேற்பட்டவா்கள் அதிமுகவில் இணைந்தனா். இதேபோல வேட்டங்குடி ஊராட்சியில் திமுகவிலிருந்து விலகி ரவி, அன்பு, ஸ்ரீதா் உள்ளிட்டோா் அதிமுகவில் இணைந்தனா்.