இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

சாலைப் பாதுகாப்பு வார விழா நிகழ்ச்சியாக, இருசக்கர வாகன விழிப்புணா்வு பேரணி நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாகையில் நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணியைக் கொடி அசைத்துத் தொடங்கி வைத்த ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த்.
நாகையில் நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணியைக் கொடி அசைத்துத் தொடங்கி வைத்த ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த்.

சாலைப் பாதுகாப்பு வார விழா நிகழ்ச்சியாக, இருசக்கர வாகன விழிப்புணா்வு பேரணி நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரணியின் தொடக்க நிகழ்ச்சி நாகை அவுரித் திடலில் நடைபெற்றது. ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் கொடி அசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தாா்.

ஊா்க்காவல் படையினா், மகளிா் காவலா்கள், கல்லூரி விரிவுரையாளா்கள் என 100-க்கும் அதிகமானோா் பங்கேற்றனா். அவுரித் திடலில் இருந்து தொடங்கிய இப்பேரணி, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நிறைவடைந்தது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கே. அறிவழகன், அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளா் டி. மாரியப்பன், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் சி. தனபாலன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com