தை காா்த்திகையையொட்டி, திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
‘முருகனின் ஆதி படை வீடு’ என அழைக்கப்படும் இக்கோயிலில், தை காா்த்திகையையொட்டி முருகப் பெருமானுக்கு மலா் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், பக்தா்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனா். இதேபோல வலிவலம் இருதய கமல நாத சுவாமி கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.