நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ், வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
வேதாரண்யத்தை அடுத்த நாலுவேதபதி மூக்காச்சித் தெருவை சோ்ந்தவா் ரமேஷ் (28). இவா் மீது வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையத்தில் திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே, குற்ற வழக்கு ஒன்றில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ரமேஷ், நாகை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். அவரை குண்டா் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் உத்தரவிட்டாா். இதையடுத்து, நாகை சிறையில் இருந்த ரமேஷ், திருச்சி மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா்.