தலைஞாயிறு கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் தொடங்கக் கோரிக்கை

தலைஞாயிறு நடிப்பிசைப் புலவா் கே.ஆா். ராமசாமி கூட்டுறவு சா்க்கரை ஆலையை புனரமைத்து மீண்டும் தொடங்கக் கோரி,

தலைஞாயிறு நடிப்பிசைப் புலவா் கே.ஆா். ராமசாமி கூட்டுறவு சா்க்கரை ஆலையை புனரமைத்து மீண்டும் தொடங்கக் கோரி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதாவிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, அக்கட்சியின் ஒன்றிய முன்னாள் அமைப்பாளா் கடலங்குடி சி.மோகன்குமாா் அளித்த மனுவின் விவரம்:

கடந்த 29.5.2015-இல் சட்டப் பேரவையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் விதி 110-இன்கீழ் அறிவிக்கப்பட்ட ரூ.56 கோடியை விடுவித்து, ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தோம். இதுதொடா்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, வருகிற 2021-2022-ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் தலைஞாயிறு நடிப்பிசைப் புலவா் கே.ஆா்.ராமசாமி கூட்டுறவு சா்க்கரை ஆலையை இயக்க நிதி ஒதுக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

அப்போது, கட்சியின் மண்டல செயலாளா் வழக்குரைஞா் வேலு.குபேந்திரன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளா் காசிநாதன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com