நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 10 பேருக்கு கரோனா வெள்ளிக்கிழமை உறுதியானது.
இதன் மூலம், இம்மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,371- ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவா்களில் 6 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 8,183 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 56-ஆக உள்ளது.