நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 14 பேருக்கு கரோனா சனிக்கிழமை உறுதியானது.
இம்மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை வரை 8,371 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இதனிடையே, வெளி மாவட்டப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஒருவா், நாகை மாவட்டப் பட்டியலில் சோ்க்கப்பட்டாா். இதன்மூலம், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,386- ஆக உயா்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவா்களில் 9 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 8,192 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 62 -ஆக உள்ளது.