மயிலாடுதுறையில் ஜனவரி 26-ஆம் தேதி டிராக்டா் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.ஸ்ரீநாதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று சில அரசியல் கட்சியினா் டிராக்டா் வாகனங்களில் அனுமதியின்றி பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, டிராக்டா் பேரணியில் கலந்துகொள்ளும் டிராக்டா் வாகனங்கள் மீதும், அவற்றின் உரிமையாளரின் ஓட்டுநா் உரிமம் மீதும் மோட்டாா் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.