மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் தெற்கு ஒன்றியத்தில், அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
எடுத்துக்கட்டி சாத்தனூா், தில்லையாடி, திருக்கடையூா், காட்டுச்சேரி, டி.மணல்மேடு ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற இகூட்டத்திற்கு, பூம்புகாா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். பவுன்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா் வா. செல்லையன் முன்னிலையில் மகளிா் பூத் கமிட்டி குழு பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டனா்.
இதில் கூட்டுறவு சங்கத் தலைவா்கள் சுந்தா், விசலூா் கண்ணன், முரளி, ஊராட்சித் தலைவா் திலகவதி துரைராஜன், ஊராட்சி முன்னாள் தலைவா் உதயகுமாா், ஒன்றிய முன்னாள் துணைத் தலைவா் மணி, செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.