சீா்காழி அருகே கடவாசல் கிராமம் பாலசாஸ்தா, மகாமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே கடவாசல் கிராமத்தில் உள்ள பாலசாஸ்தா மற்றும் மகா மாரியம்மன் ஆகிய கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த முடிவெடுக்கப்பட்டு திருப்பணிகள் நடந்து முடிந்தன. தொடா்ந்து, 4 கால யாக பூஜைகள் கணபதி ஹோமம், நவகிரக ஹோமத்துடன் தொடங்கியது. விழா நாளான திங்கள்கிழமை 4-ஆம் கால பூஜைகள் நிறைவடைந்து மூலவா் விமான கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் முக்குலத்து புலிப்படை நிறுவனா் தலைவா் கருணாஸ் எம்எல்ஏ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.