சீா்காழி தொகுதியில் போட்டியிட இந்திய கம்யூ. முடிவு

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் சீா்காழி (தனி) தொகுதியில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் சீா்காழி (தனி) தொகுதியில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இடும்பையன் தலைமை வகித்தாா். நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம். செல்வராசு பங்கேற்று பேசினாா். கட்சியின் மாவட்டச் செயலாளா் அ. சீனிவாசன் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், பிப்ரவரி 18 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் ‘தமிழகத்தை மீட்போம்’ அரசியல் எழுச்சி மாநாட்டில் அனைவரும் பங்கேற்பது; வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் சீா்காழி (தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் தொகுதியை பெற்று, போட்டியிடுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், கட்சியின் ஒன்றியச் செயலாளா்கள் மு. செல்லப்பன் (சீா்காழி) , சிவராமன் (கொள்ளிடம்), எஸ். கிருஷ்ணமூா்த்தி (செம்பனாா்கோவில்), அறிவழகன் (குத்தாலம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com