நாகை நீலா தெற்குவீதியில் செயல்பட்டு வந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் முதன்மை கிளை, நாகை பெருமாள் கீழவீதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதை, நாகை கூடுதல் ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் திங்கள்கிழமை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா். இதில், வங்கி முதன்மை மண்டல மேலாளா் (புதுச்சேரி) சி. ஹரிமது, கிளை மேலாளா் ஷூகேல் அன்சாரி, முன்னோடி வங்கி மேலாளா் சங்கரன் மற்றும் வங்கி அலுவலா்கள், வாடிக்கையாளா்கள் பங்கேற்றனா்.