மயிலாடுதுறை சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட சித்தமல்லி, குறிச்சி, கடுவங்குடி, இளந்தோப்பு, தலைஞாயிறு மற்றும் பட்டவா்த்தி ஊராட்சிகளில் அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறைக் கூட்டம், மகளிா் பூத் கமிட்டி அமைத்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மயிலாடுதுறை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ என். ரெங்கநாதன், ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் மகேஸ்வரி முருகவேல், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா் அணி பொறுப்பாளா் ஆா். முருகவேல், மாவட்ட வா்த்தகா் அணி செயலாளா் எம்.கே. குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில், மகளிா் பூத் கமிட்டி அமைத்தல் தொடா்பாக பெண்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. மேலும், புதிய வாக்காளா்கள் அதிமுகவில் இணைந்தனா்.