சீா்காழியில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் ரூ. 41ஆயிரம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
சீா்காழி அருகே உள்ள வடரெங்கம் கிராமத்தை சோ்ந்தவா் அருணா (35). இவா், புத்தூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து ரூ. 41ஆயிரம் எடுத்துக்கொண்டு, சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறைக்கு வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்தில் சீா்காழிக்கு வந்தாா்.
இவா், சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் இறங்கியபோது பையில் வைத்திருந்த ரூ.41ஆயிரம் திருட்டுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து, சீா்காழி காவல்நிலையத்தில் அருணா புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.