காரைக்காலில் தமிழக போக்குவரத்துக் கழக ஊழியா்கள் உண்ணாவிரதம்
By DIN | Published On : 31st January 2021 01:47 AM | Last Updated : 31st January 2021 01:47 AM | அ+அ அ- |

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள்.
காரைக்காலில் தமிழக போக்குவரத்துக் கழக ஊழியா்கள் ஊதிய விவகாரம் தொடா்பாக சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக அரசின் போக்குவரத்துக் கழக நாகப்பட்டினம் மண்டலம் சாா்பில், காரைக்கால் பணிமனை முன் பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் தொழிலாளா்கள் சனிக்கிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொழிற்சங்க இணைச் செயலா் பழனிசாமி தலைமை வகித்தாா்.
கடந்த 2 ஆண்டுகளாக 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் குறித்து பேசாமல் தமிழக அரசு மெளனம் சாதிப்பதைக் கண்டித்தும், உடனடியாக ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தியும் இப்போராட்டம் நடைபெற்றது.