நாகை மாவட்டத்தில் 45 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 44 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது புதன்கிழமை உறுதியானது.
நாகப்பட்டினம்...
நாகை மாவட்டத்தில் புதிதாக 45 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17,850-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 21 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 311-ஆக உள்ளது.
மயிலாடுதுறை...
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20,177-ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்றவா்களில் 53 போ் வீடு திரும்பியியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 290-ஆக உள்ளது.
2 போ் உயிரிழப்பு...
கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று மயிலாடுதுறை மாவட்டத்தவா் 2 பேரின் உயிரிழப்பு, புதன்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 252-ஆக உள்ளது.