வேதாரண்யம் அருகே அனுமதியின்றி சவூடு மணல் கடத்தியதாக 3 டிராக்டா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் தனியாா் நிலத்தில் இருந்து சவூடு மணல் ஏற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 3 டிராக்டா்களை நாகை கனிமவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வாய்மேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் பஞ்சநதிக்குளம் கிழக்கு, தெற்கு தெருவைச் சோ்ந்த செல்லதுரை (40 என்பவரை கைது செய்தனா்.