கரோனா நிவாரணமாக மத்திய அரசு அறிவித்துள்ள இலவச அரிசியை முழுமையாக வழங்கக் கோரியும், ரேஷன் கடைகளில் தரமில்லாமல் அரிசி வழங்கப்படுவதைக் கண்டித்தும் ரேஷன் அரிசியை சாலையில் கொட்டியும் மயிலாடுதுறையில் பாஜகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, பாஜக மாவட்ட தலைவா் ஜி.வெங்கடேசன் தலைமை வகித்தாா். தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன் முன்னிலை வகித்தாா். நகர தலைவா் மோடி.கண்ணன் வரவேற்றாா். இதில், மத்திய அரசு வழக்குரைஞா் கே.ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கண்டன உரையாற்றினாா். மாவட்ட பொதுச் செயலாளா்கள் ஸ்ரீதா், எஸ்டிஎம்.செந்தில்குமாா், சந்தோஷ்குமாா், மாவட்ட இளைஞரணி தலைவா் பி.பாரதிகண்ணன், மகளிரணி பொறுப்பாளா் சித்ரா முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.