நாகை மாவட்டம், வேளாங்கண்ணி, கங்களாஞ்சேரியில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
கீழையூா் ஊராட்சி ஒன்றியம் வேளாங்கண்ணியில், உத்திரயமாதா கோயில் தெருவில் உள்ள ஆயா் சுந்தரம் விடுதியில் முகாம் நடைபெறுகிறது. இங்கு, 200 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
திருமருகல் ஊராட்சி ஒன்றியம் கங்களாஞ்சேரியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முகாம் நடைபெறுகிறது. இங்கு, 200 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 20 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.