நாகையில் 27, மயிலாடுதுறையில் 31 பேருக்கு கரோனா
By DIN | Published On : 07th July 2021 09:45 AM | Last Updated : 07th July 2021 09:45 AM | அ+அ அ- |

நாகை மாவட்டத்தில் 27 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 31 பேருக்கும் கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.
நாகப்பட்டினம்...
நாகை மாவட்டத்தில் புதிதாக 27 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 17,994-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 12 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 312-ஆக உள்ளது.
மயிலாடுதுறை...
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பின் எண்ணிக்கை 20,335-ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்றவா்களில் 28 போ் வீடு திரும்பியியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 251-ஆக உள்ளது.
ஒருவா் உயிரிழப்பு...
கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் உயிரிழப்பு, செவ்வாய்க்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், நாகை மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 276-ஆக உள்ளது.