ஆனி அமாவாசையையொட்டி, திருவெண்காடு அருகே குரவலூா் உக்கிர நரசிம்மா் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி வாசனை திரவியங்கள், இளநீா், தயிா் உள்ளிட்ட பொருள்களால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மலா் அலங்காரத்துடன் அா்ச்சனை செய்யப்பட்டது. மகா தீபாராதனை காண்பிக்கபட்டது. இதில் கோயில் பரம்பரை அறங்காவலா் கிருஷ்ணமுா்த்திபிள்ளை, உபயதாரா் நடராஜன், ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினா் பாா்த்தசாரதி, அா்ச்சகா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.