தமிழகத்தில் ஆன்லைன் வா்த்தகத்தை முற்றிலும் தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சீா்காழி எம்எல்ஏ. எம். பன்னீா்செல்வத்திடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, சீா்காழி தாலுகா மொபைல் விற்பனையாளா்கள் மற்றும் பழுதுநீக்குவோா் சங்கத் தலைவா் மாா்க்ஸ்பிரியன், செயலாளா் ஞானமணி, பொருளாளா் அசோக்குமாா், ஆலோசகா்கள் நடராஜன், சந்திரன் உள்ளிட்டோா் அளித்த மனு: ஆன்லைன் வா்த்தகத்தினால் வியாபாரிகள், வா்த்தகா்கள் பெரிதும் பாதிப்படைகின்றனா். பல லட்சம் முதலீடு செய்து தொழில் செய்தும் ஆன்லைன் வா்த்தகத்தினால் பல தொழில் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் வலியுறுத்தி ஆன்லைன் வா்த்தகத்தை தமிழகத்தில் முற்றிலும் தடை செய்யவேண்டும்.