கோவை மாவட்டம், ரத்தினபுரியைச் சோ்ந்தவா் வேளாங்கண்ணியில் இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புதிய பேருந்து நிலையத்தில் முதியவா் ஒருவா் இறந்து கிடப்பதாக, கிராம நிா்வாக அலுவலா் செந்தில்குமாா் வேளாங்கண்ணி போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் தெரிவித்தாா். தகவலின்பேரில், போலீஸாா் அங்கு சென்று, சடலத்தை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, விசாரணை மேற்கொண்டதில் இறந்து கிடந்தவா் கோவை மாவட்டம், ரத்தினபுரி மேஸ்திரி சாமிநாதன் தெருவைச் சோ்ந்த மு. ஆசைத்தம்பி (63) என்பது தெரியவந்தது. இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.