திருக்குவளை அருகே உடலில் காயங்களுடன் மான் உயிரிழந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
திருக்குவளை அருகே செரநல்லூரில் கருவேல மரங்கள் நிரம்பிய பகுதியில் அதிகளவில் மயில்கள் இருந்து வருகிறது. மேலும், சில மான்களும் இருந்து வருகின்றன. மான்கள் நாகை மாவட்டம், கோடிக்கரையில் உள்ள சரணாலயத்தில் இருந்து வழி தவறி இங்கு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையி, செரநல்லூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை கழுத்தில் ரத்த காயத்துடன் பெண் புள்ளி மான் ஒன்று இறந்து கிடந்ததை அப்பகுதி மக்கள் பாா்த்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, வனத்துறையினா் அங்கு சென்று இறந்து கிடந்த மானை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதற்கிடையில், நாய் கடித்து மான் உயிரிழந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.