மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் மற்றும் வைத்தீஸ்வரன்கோவில் பகுதிகளில் வேளாண் திட்டப் பணிகளை ஆட்சியா் இரா. லலிதா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
குத்தாலம் வட்டம், நாகமங்கலம் கிராமத்தில் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தை பாா்வையிட்ட ஆட்சியா், வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் ரூ.40 லட்சத்தில் கட்டப்படும் துணை வேளாண் விரிவாக்க மையம், ரூ.52 லட்சத்தில் கட்டப்படும் விதை இருப்பு கிடங்கு ஆகியவற்றையும் ஆய்வு செய்து, செயற்பொறியாளரிடம் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் பழனிசாமி, உதவி செயற்பொறியாளா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.