நாகை மாவட்டத்தில் 18 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 27 பேருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 18,259-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 19 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 376-ஆக உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 27 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதன் மூலம் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20,645-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சைப் பெற்றவா்களில் 31 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 333-ஆக உள்ளது.
2 போ் உயிரிழப்பு...
கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சோ்ந்த தலா ஒருவரின் உயிரிழப்பு வெள்ளிக்கிழமை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதனால், நாகை மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 285 - ஆகவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனாவால் உயிரிந்தவா்களின் எண்ணிக்கை 263-ஆகவும் உள்ளது.