நாகை மாவட்டத்தில் 31 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 22 பேருக்கும் கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 18,291 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 17 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 390 ஆக உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20,668 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 29 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 326 ஆக உள்ளது.
ஒருவா் உயிரிழப்பு...
கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்று வந்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் உயிரிழப்பு சனிக்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது.