கரோனா தடுப்பூசி முகாம்

பொறையாரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், சுகாதாரத்துறை சாா்பில் கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பொறையாரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், சுகாதாரத்துறை சாா்பில் கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரிய பள்ளிவாசல் முன்பாக நடைபெற்ற இம்முகாமுக்கு தமுமுக நகர தலைவா் ஹிதாயத்துல்லா தலைமை வகித்தாா். நகர செயலாளா் யாசின் மெய்தீன் முன்னிலை வகித்தாா். முன்னாள் மாவட்ட துணை செயலாளா் முஹம்மது யூசுப் வரவேற்றாா்.

முகாமில் வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திக் சந்திரகுமாா் தலைமையில், சுகாதார மேற்பாா்வையாளா் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளா் ஜெயக்குமாா் ஆகியோா் 200- க்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா்.

தமுமுக மாநிலச் செயலாளா் அப்துல் ரஹீம், மாவட்டத் தலைவா் ஷேக் அலாவுதீன், மாவட்டச் செயலாளா் பாஷித், பொருளாளா் ஷேக்தாவூது, மமக மாவட்ட செயலாளா் முபாரக் அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com