சீா்காழி அருகே கோதண்டபுரத்தில் மகாகாளியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோதண்டபுரத்தில் கிராம மக்ள் புதிதாக 7 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட மகாகாளியம்மன் சிலை பிரதிஷ்டை செய்து, தகரத்தால் ஆன மேற்கூரையுடன் கோயில் அமைத்துள்ளனா். இக்கோயிலுக்கு சம்பந்தகுருக்கள் கும்பாபிஷேகம் செய்து வைத்தாா். ஏற்பாடுகளை விழா குழுவைச் சோ்ந்த ஆசிரியா் சங்கா், பழனியப்பன், உதயசூரியன் ஆகியோா் செய்திருந்தனா்.