வேதாரண்யம் அருகே பலத்த இடி, மின்னலுடன் வெள்ளிக்கிழமை மழை பெய்தது.
கரியாப்பட்டினம், கள்ளிமேடு, உம்பளச்சேரி, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட சுற்றுப் பகுதி கிராமங்களில் வெள்ளிக்கிழமை பகல் பொழுதில் இம்மழை பெய்தது. இதனால், அப்பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீா் தேங்கின. இம்மழை சாகுபடி பணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனா். ஆனால், வேதாரண்யம் நகரப் பகுதி மற்றும் தெற்கு கடலோரப் பகுதியில் மழை இல்லை.