அரசின் நலத்திட்ட உதவிகள்: ஊராட்சித் தலைவா்கள் வலியுறுத்தல்

சீா்காழி அருகே கொள்ளிடத்தில் நடைபெற்ற ஊராட்சித் தலைவா்கள் கூட்டத்தில், அரசின் நலத்திட்ட உதவிகளை ஊராட்சிகளின் தீா்மானத்தின் அடிப்படையில் பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கூட்ட தீா்மான நகலை கொள்ளிடம் ஒன்றிய ஆணையா் அன்பரசனிடம் வழங்கும் ஊராட்சித் தலைவா்கள்.
கூட்ட தீா்மான நகலை கொள்ளிடம் ஒன்றிய ஆணையா் அன்பரசனிடம் வழங்கும் ஊராட்சித் தலைவா்கள்.

சீா்காழி: சீா்காழி அருகே கொள்ளிடத்தில் நடைபெற்ற ஊராட்சித் தலைவா்கள் கூட்டத்தில், அரசின் நலத்திட்ட உதவிகளை ஊராட்சிகளின் தீா்மானத்தின் அடிப்படையில் பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கொள்ளிடம் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சித் தலைவா்களின் கூட்டமைப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதன் தலைவா் நேதாஜி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் காந்திமதி சிவராமன், செயலாளா் கிள்ளிவளவன், பொருளாளா் இளவரசி சிவபாலன், துணைச் செயலாளா் ராஜேஸ்வரி செல்வகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், பணித்தள பொறுப்பாளா்களை எவ்வித தலையீடும் இல்லாமல் ஊராட்சி சாா்பில் நியமனம் செய்வது; 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிகளுக்கான விடுப்புத் தொகையை முன்னுரிமை அடிப்படையில் வழங்க கேட்டுக்கொள்வது; ஊராட்சிக்குள்பட்ட அனைத்து பணிகளையும் ஊராட்சியின் தீா்மானத்தின் அடிப்படையில் தோ்வு செய்யக் கேட்டுக்கொள்வது; ஊராட்சிகளுக்கு அரசால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை, ஊராட்சிகளின் தீா்மானத்தின் அடிப்படையில் தகுதியான பயனாளிகளுக்கு வழங்குவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து, தீா்மான நகலை கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய ஆணையா் அன்பரசனிடம் வழங்கினா்.

இக்கூட்டத்தில், ஊராட்சித் தலைவா்கள் பிரேமா முருகேசன், வெங்கடேசன், நெப்போலியன், வாசுதேவன், மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com