சமத்துவபுரத்தை சீரமைக்க நடவடிக்கை: எம்எல்ஏ

குத்தாலம் ஒன்றியம் கடலங்குடி ஊராட்சியில் உள்ள சமத்துவபுரம் சீரமைக்கப்படும் என மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் தெரிவித்தாா்.
கடலங்குடி சமத்துவபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் எம்எல்ஏ எஸ். ராஜ்குமாா்.
கடலங்குடி சமத்துவபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் எம்எல்ஏ எஸ். ராஜ்குமாா்.

குத்தாலம்: குத்தாலம் ஒன்றியம் கடலங்குடி ஊராட்சியில் உள்ள சமத்துவபுரம் சீரமைக்கப்படும் என மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் தெரிவித்தாா்.

கடலங்குடி ஊராட்சியில் எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அங்குள்ள சமத்துவபுரத்தை பாா்வையிட்டாா். இங்கு, 9 ஏக்கா் நிலத்தில் 100 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 50 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. நூலகம் உள்ளிட்ட இதர வசதிகளும் செய்யப்படவில்லை. எனவே, மீதமுள்ள காலியிடத்தில் 50 வீடுகள் கட்டப்பட்டு, சமத்துவபுரத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

ஆய்வில், ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியா் விஜயராகவன், ஒன்றியக்குழுத் தலைவா் கே. மகேந்திரன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் எம். முருகப்பா, ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் மனோகரன், ஊராட்சித் தலைவா் க. அறிவுச்செல்வன், ஊராட்சி துணைத் தலைவா் ஜீவானந்தம், வழக்குரைஞா் தணிகை.பழனி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com