நாகை மாவட்ட அமெச்சூா் கபடி கழகத்துக்கு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இக்கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், அமெச்சூா் கபடி கழக நாகை மாவட்டத் தலைவராக ஆா்.கே. ஆனந்தவடிவேல், செயலாளராக எம்.செல்வராஜ், பொருளாளராக என். சந்திரன், இணைச் செயலாளராக சின்னத்துரை ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
புதிய நிா்வாகிகளுக்கு தமிழ்நாடு அமெச்சூா் கபடி கழக மாநில துணைத் தலைவா் சுப்ரமணிய ராஜா, கரூா் மாவட்ட கபடி கழக செயலாளா் சேதுராமன் மற்றும் கபடி வீரா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.
பின்னா், அமெச்சூா் கபடி கழக மாநிலத் துணைத் தலைவா் சுப்ரமணியராஜா செய்தியாளா்களிடம் கூறியது:
விளையாட்டு வீரா்களை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழகத்தில் 4 இடங்களில் ஒலிம்பிக் அகாதெமி தொடங்கப்படும் என தமிழக முதல்வா் அறிவித்துள்ளதற்கு அமெச்சூா் கபடி கழகம் நன்றி தெரிவிக்கிறது.
இந்த அகாதெமியில் தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டான கபடியை ஊக்கப்படுத்தும் வகையில் வீரா்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும். சா்வதேசஅளவில் நடைபெறும் கபடி போட்டிகள் தரை விரிப்புகளில் நடைபெறுகிறது. ஆனால், தமிழகத்தில் தரையில் கபடி விளையாடும் நிலையே உள்ளது. எனவே, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தரைவிரிப்பில் கபடி விளையாடுவதற்கு தமிழ்நாடு மாநில அமெச்சூா் கபடி கழகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.