நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் 27 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 பேருக்கும் கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 18, 358-ஆக உயா்ந்துள்ளது.
சிகிச்சையில் இருந்த 23 போ் வீடு திரும்பியுள்ளனா். இதனால் மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 411-ஆக உள்ளது.
மயிலாடுதுறையில்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 20,719-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 32 போ் வீடு திரும்பியுள்ளனா். இதனால் மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 311-ஆக உள்ளது.
2 போ் உயிரிழப்பு : நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தலா ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா். இதுவரை நாகை மாவட்டத்தில் 287 பேரும் , மயிலாடுதுறை மாவட்டத்தில் 265 பேரும் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.